உரிச்சொல்

உரிச்சொல்


உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

 

உரிச்சொல் இருவகைப்படும்

* ஒரு பொருள் குறித்த பல சொல்
*
பல பொருள் குறித்த ஒரு சொல்

 

.கா

ஒரு பொருள் குறித்த பல சொல்

* சாலப் பேசினான்.
*
உறு புகழ்.
*
தவ உயர்ந்தன.
*
நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

 

பல பொருள் குறித்த ஒரு சொல்

* கடிமனை - காவல்
*
கடிவாள் - கூர்மை
*
கடி மிளகு - கரிப்பு
*
கடிமலர் - சிறப்பு

இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்