வ வரிசை

பழமொழிகள்: வ வரிசை

வ, வா, வி

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.


வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.


வடக்கே கருத்தால் மழை வரும்.


வட்டி ஆசை முதலுக்கு கேடு.


வணங்கின முள் பிழைக்கும்.

 

வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.


வருந்தினால் வாராதது இல்லை.


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.


வளவனாயினும் அளவறிந் தளித்துண்


வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

 

வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்


வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.


வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.


வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.


வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.


வாழ்வும் தாழ்வும் சில காலம்.

 

விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.


விதி எப்படியோ மதி அப்படி.


வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?


விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?


விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

 

வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.


விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?


விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.


விளையும் பயிர் முளையிலே தெரியும்.


வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்