வாக்கியம்/ வசனம்

வாக்கியம்



தமிழ் இலக்கணப் படி ஒரு வசனம் முன்று கூறுகளாக வகுக்கப்படும்.

அவை:

  • எழுவாய்,
  • செய்படுபொருள்,
  • பயனிலை.

 

எழுவாய்:
எழுவாய் என்பது ஒரு வசனத்தில் யார், எது, எவை என்பதின் பதில் ஆகும். ஆகவே, எழுவாய் என்பது ஒரு செயலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது ஆகும்.


.கா:
சிவா பந்து விளையாடினான். இதில் "சிவா" எழுவாய் ஆகும்.

 

செய்படுபொருள்:
ஒரு வசனத்தில் யாரை ,எதை அல்லது எவற்றை என்பதின் பதில் ஆகும். செய்படுபொருள் என்பது எழுவாய் செய்யும் தொழிலின் பயனை அடைவது ஆகும்.

 

.கா:
சிவா பந்து விளையாடினான். இந்த வசனத்தில் பந்து செய்படுபொருள் ஆகும்.

 

பயனிலை:
ஒரு வசனத்தில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல் (வினை முற்று) பயனிலை எனப்படுகிறது.

 

எகா:
சிவா பந்து விளையாடினான். இந்த வசனத்தில் விளையாடினான் பயனிலை ஆகும்.