நடவுப்பாட்டு

நடவுப்பாட்டு: 1

தங்கரதம் நானிருக்க அம்மாடியோ
அந்த தட்டுக்கெட்ட அத்தபுள்ள அம்மாடியோ
தங்காளையும் மாலையிட்டான்

உருமத்தில் பூத்த பூவு
ஊசி மல்லி நானிருக்க
ஊசடிச்ச பூவுக்கேதான்
ஊரு ஊரா சுத்துரானே

காலையில பூத்த பூவு
கனகாம்பரம் நானிருக்க
கவுச்சடிச்ச பூவுக்கேதான்
அவன் காடு காடா சுத்துரானே.

நடவுப்பாட்டு: கடவுள் வாழ்த்து

சந்திரரே சூரியரே
சாமி பகவானே

சந்திரரே நான் நினைச்சி
சாய்ச்சேன் திருஅலவு

சாய்ச்ச திரு அலவு
சமச்சி பறி ஏறனும்

எடுத்த திரு அலவு
எழுந்து பறி ஏறனும்

என்றவாறு கடவுளை வாழ்த்திப் பாடுவர்.